அண்மையில், ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளியைப் பகிர்ந்திருந்த நபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதான அவரை வெல்லம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என்பவராவார் என பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.