சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவி பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் முடிவடையும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.
Nikkei Asia News சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது, இந்தப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் முடிவடைந்து சாதகமான முடிவு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த கடன் உதவி மூலம், இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 1.5 பில்லியன் டொலர் நிதி வசதியை செயற்படுத்துவதற்கும், 1.5 பில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க சீனா எதிர்பார்க்கிறது.