ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களில் காணப்படும் கைரேகைகள் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த கைரேகைகளுக்கு சொந்தக்காரர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது.
எக்காரணம் கொண்டும் அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், பொலிஸ் அறிக்கையைப் பெற அனுமதிக்கப்படாது.
அத்துடன், அவர்களின் தலைமுறையினர் எவருக்கும் அரசாங்கத்திலோ அல்லது பாதுகாப்புத் துறையிலோ வேலை கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.