ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சாகல ரத்நாயக்க இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தின் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, செயலாளர் நாயகம் பாலித ரங்கேபண்டார, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருடன் ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.