முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலம் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாவுக்கு 14 நாட்கள் குறுகியகால விசா வழங்கப்பட்டது.
இதன்படி புதிய விசா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையில் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது.