அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுபவர்களுக்கு விசேட ஒரு நாள் சேவை கிடைக்கப்பெறும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தகையவர்கள், வாட்ஸ்எப் மூலம் தங்கள் ஆவணங்களை 070 631 1711 க்கு அனுப்புவதன் மூலம் சேவைக்கான அனுமதியை பெற்றுக்கொள்ளலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே பதிவை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே நாளை (ஜூலை 27) முதல் கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று திணைக்களம் இன்று முன்னதாக அறிவித்திருந்தது.
இதன்படி கடவுச்சீட்டைப் பெறுவதற்கு வருகை தரும் போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் முன்பதிவு பெறுவது கட்டாயமாகும் என்றும் திணைக்களம் அறிவித்திருந்தது