Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு"கொவிட் காலத்தில் நிவாரணம் வழங்க, வைப்பாளர்களின் வட்டியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது"

“கொவிட் காலத்தில் நிவாரணம் வழங்க, வைப்பாளர்களின் வட்டியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது”

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, கொவிட் காலப்பகுதியில் மத்திய வங்கியால் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் கடன்கள் குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.

சலுகைகளை வழங்குவதற்குத் தேவையான பணம் திறைசேரியால் வழங்கப்படவில்லை என்றும், சலுகைகளுக்கான பணம் வங்கி அமைப்பின் வைப்பாளர்களின் பணத்தின் வட்டியில் இருந்து முழுமையாக பெறப்பட்டதாகவும், வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து ஒரு துமியும் அரசாங்கம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நேற்று (25) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து தேவையான பணத்தை வழங்க வேண்டும் என்றும், கொவிட் காலத்தில் ஏனைய நாடுகளிலும் நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நிவாரணம் வழங்குவதற்கான உத்தரவுகளை வழங்கும் போது அது தொடர்பான பணம் எவ்வாறு வழங்கப்படும் என அமைச்சரவை அறிவித்திருக்க வேண்டும் எனவும் நிவாரணம் வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் பணம் எவ்வாறு வழங்கப்படும் என்பது இடம்பெறவில்லை எனவும் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles