Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

காலிமுகத்திடலில் 100 நாட்களுக்கும் மேலாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நேற்று நள்ளிரவு முதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன் அந்த பிரதேசத்திலிருந்து போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது பலர் காயமடைந்ததுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

இந்த சம்பவம் தொடர்பில் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குறிப்பாக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற மறுநாளே இந்த சம்பவம் இடம்பெற்றமை வெட்கக் கேடானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles