நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதற்கான கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.