நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலிகே வசந்த குமார, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை சூழவுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.