Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிங்கப்பூரில் கால் பதித்தார் கோட்டாபய

சிங்கப்பூரில் கால் பதித்தார் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவிலிருந்து இன்று புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளார்.

சவுதி அரேபியா விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக, அவர் சற்று முன்னர் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ , சிங்கப்பூரில் அடைகலம் கோரியுள்ளதாக தெரிய வருகின்றது.

அதுமாத்திரமன்றி, சிங்கப்பூரிலிருந்து தனி விமானத்தின் மூலம் உகண்டா நோக்கி செல்லவும் சாத்தியம் உள்ளதாக தெரிய வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles