உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்துக்கு ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி, பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்யுமாறும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.