இன்று 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போது மாலைதீவு சென்றுள்ள அவர், அவருக்கு பதிலாக செயற்படுவதற்கு ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளார்.
அவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் வரையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியில் தொடர்வார் என சபாநாயகரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் பதவியில் இருந்து விலகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.