ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நாளை (13) முதல் அமுலுக்கு வரும் வகையில், இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், நாளை (13) அறிவிக்கப்படும்.
நாட்டின் வரலாற்றில் தனது பதவிக்காலம் முடிவதற்குள் இராஜினாமா செய்த முதல் மற்றும் ஒரே ஜனாதிபதி என்ற பெருமையை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுள்ளார்.
அவரது பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.