சர்வதேச ரீதியில் விமான டிக்கட்டுக்களின் விலைகள் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக இவ்வாறு கட்டணங்கள் உயர்வடையும் என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், யுக்ரைன் – ரஷ்யா போரும் இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், குளிரான காலநிலை அடுத்துவரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதனால், கட்டணங்கள் உயர்வடையும் என தெரிவிக்கபட்டுள்ளது.