காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறுகிறது.
நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, எதிர்கால அரசியல் நடவடிக்கை மற்றும் அவை திட்டமிடப்பட வேண்டிய விதம் தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.