எரிபொருள் கப்பல்கள் எப்போது நாட்டுக்கு வரும் எனவும் அதன் கொடுப்பனவுகள் சம்பந்தமாகவும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
IOC நிறுவனத்தில் இருந்து இலங்கைக்கு கொள்வனவு செய்யப்பட்ட டீசல் அடங்கிய கப்பல் இந்த மாதம் 15-17ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கை வரும்.
இந்த கப்பலுக்கான முழுமையான கொடுப்பவு வெள்ளிக்கிழமை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று பெற்றோலுடனான கப்பல் ஒன்று 22-24 திகதிகளுக்கு இடையில் கொழும்பு வரும்.
கடந்தவாரம் முற்கொடுப்பனவு செலுத்தப்பட்ட டீசலுக்கான கப்பல் 15-17க்கு இடையிலும், பெற்றோலுக்கான கப்பல் 17-19க்கு இடையிலும் இலங்கை வரும்.
அவற்றுக்கான மீதக் கொடுப்பனவு இன்றும் நாளையும் செலுத்தப்படும்.
நாளை (12) முதல் 17ஆம் திகதிக்குள் மேலும் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன.
9ஆம் திகதி வரவிருந்த எரிபொருள் கப்பல், 12-15க்கு இடையில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது