Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் குளிர்பான நிலையத்திற்கு வாரி வழங்கப்படும் டீசல்

யாழில் குளிர்பான நிலையத்திற்கு வாரி வழங்கப்படும் டீசல்

யாழிலுள்ள குளிர்பான நிலையமொன்றிற்கு, நாளாந்தம் சுமார் 200 லீட்டர் டீசலை பெறுவதற்குரிய அனுமதியை யாழ் மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த குளிர்பான நிலையம் ஒன்றிற்கான தேவை கருதி சுமார் 200 லீட்டர் டீசலை வழங்குமாறு, மாவட்ட செயலகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் இரு மாதங்களுக்கு மேலாக மக்கள் எரிபொருள் வரிசைகளில் காணப்படும் நிலையில், குளிர்பான நிலையத்திற்கு ஏன் முண்டியடித்துக் கொண்டு எரிபொருள் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுகிறது.

யாழ் மாவட்டத்தில் சாதாரணமாக உற்பத்தி துறையில் ஈடுபடும் வியாபாரிகள் , நாளாந்த உணவு தயாரிப்பாளர்கள், முச்சக்கர வண்டிகளில் நடமாடும் வெதுப்பகப் பொருட்களை விற்பனை செய்வோர் , மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள், ஊடகத்துறையினர், தனியார் துறையினர் மற்றும் மீன் வியாபாரிகள் என நாளாந்த வருமானத்திற்காக ஏங்கித் தவிப்போர் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலைமை நீடித்து வரும் நிலையில், அரசாங்கத்தினால் கடந்த மாதம் முதல் அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருள் விநியோகிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது .

எனினும் கடந்த 4ஆம் மாதம் முதல் யாழில் உள்ள குளிர்பான நிலையம் ஒன்றுக்கு நாள் ஒன்றிற்கு சுமார் 200 லீட்டர் டீசலை பெறுவதற்கான அனுமதியை மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ரூபா 1000 முதல் 1500 ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ் மாவட்ட செயலகம் எவ்வாறு அத்தியாவசிய சேவையில் உள்ளடக்கப்படாத குளிர்பான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு பெருந்தொகை எரிபொருளுக்கு அனுமதி வழங்கிய பிண்ணனி என்ன?

யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணப்படுகின்ற நிலையில், இவ்வாறு மேல் அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது அவர்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழப்பதாகவே அமையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles