Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியத்துறை முடங்கும் அபாயம்

வைத்தியத்துறை முடங்கும் அபாயம்

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அத்தியாவசிய மருந்துகள் இன்மையால் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சில வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் பல நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு வைத்தியர்கள் பெருமளவில் வெளியேறுவதென்பது பொதுமக்களை இன்னும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதோடு, வைத்தியத்துறை முடங்கும் அபாய நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles