எதிர்காலத்தில் 5,000 ரூபா நாணயத் தாள் கூட மதிப்பு இல்லாமல் போகக்கூடும் என தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடு அதிக பணவீக்கத்தை நோக்கி நகர்வதாகவும், பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூன் மாத பணவீக்கம் மட்டும் 54 சதவீதமாக உள்ளதாகவும், பணவீக்கத்தில் சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனவரி மாதம் முதல் பணவீக்கம் மாதாந்தம் 10 தொடக்கம் 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.