இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில், பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், காலி முகத்திடல் போராட்டக்களத்தில் வைத்து கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத நிலையில், சந்தேகத்துக்குரியவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவர், காலிமுகத்திடலில் கடந்த 2 மாதங்களாகத் தங்கியிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்ப்பட்டவர், கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவரை ஜூலை 12ஆம் திகதி இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, ஜூலை 22ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.