Friday, May 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதிக்கு உலக வங்கி வழங்கிய உறுதி

ஜனாதிபதிக்கு உலக வங்கி வழங்கிய உறுதி

உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிதி உதவி வழங்கக்கூடிய வகையில் அந்த திட்டங்கள் மீள்வடிவமைக்கப்படும் என்று உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டிய பிறகு உலக வங்கியின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கிய ஜனாதிபதிஇ உலக வங்கி ஒதுக்கும் கடன் உதவிகளைஇ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

விவசாயம்இ கால்நடைகள்இ சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துக்கு பெற்றுக்கொள்ளக்கக்கூடிய வகையில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அந்த கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

வீட்டு எரிவாயு மற்றும் உரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles