Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடினமாக காலத்தின் கடைசி கட்டத்தை மக்கள் அனுபவிக்கின்றனர் - பிரதமர்

கடினமாக காலத்தின் கடைசி கட்டத்தை மக்கள் அனுபவிக்கின்றனர் – பிரதமர்

இலங்கை மக்கள் தமது கடினமான காலத்தின் கடைசி கட்டத்தை தற்போது அனுபவிக்கிறார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடக பிரதானிகளை சந்தித்து உரையாடும் போது அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

தாம் முன்னதாகவே கூறியது போன்று 3 வார கடுமையான காலத்தை தற்போது மக்கள் அனுபவிக்கின்றனர்

இந்த காலம் நிறைவடைந்ததும், நாடு படிப்படியாக பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகரித்திருந்தாலும் இந்தியாவுடன் கலந்துரையாடி விரைவில் எரிபொருளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிகள் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles