மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.
நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச, அவ்வாறு அவர் எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை துறந்து செல்ல தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிரணிகள், அரசியல் செய்கிறது என அவர் குற்றஞ்சாட்டினார்.