Friday, July 18, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்பு

தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்பு

அக்குரஸ்ஸ, திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று (27) காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 70 வயதான மாந்திரீகர் ஒருவரென பொலிஸார் கருதுகின்றனர்.

மேற்படி நபரை கொலை செய்த நபர், அந்நபரின் தலையை துண்டித்து, அவரது வீட்டிற்கு அருகில் ஓடும் நில்வளா கங்கையில் வீசியுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சந்தேகநபர், கொல்லப்பட்ட நபரின் வீட்டுக்கு அண்மையில் வசித்துவருபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணி  கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles