கொழும்பு நீதிவான் நீதிமன்றில் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முன்னிலையாகுமாறு, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு அந்நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.