Saturday, June 7, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாம்பு விஷ முறி மருந்து இன்மையால் இதுவரையில் 20 பேர் பலி!

பாம்பு விஷ முறி மருந்து இன்மையால் இதுவரையில் 20 பேர் பலி!

பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான தடுப்பு மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க இதனை தெரிவித்தார்.

அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும்.

சில மருந்துகளுக்குத் தற்போது பயன்படுத்தப்படும் மாற்று மருந்துகளும் அடுத்த 3 வாரங்களுக்குள் மருத்துவமனை களஞ்சியங்களில் இருந்து படிப்படியாக குறைவடையும் என அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலை களஞ்சியங்களில் இருந்து 20 வீதமே மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும், அவையும் எதிர்வரும் காலங்களில் முடிவடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வைத்தியசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு மாத்திரமே மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும், வயதான நோயாளிகளை விட இளம் நோயாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles