Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்!

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்!

அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும், தற்போது வைத்தியசாலை பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை தேடுவதனால், சுகாதார கட்டமைப்பு பாரிய வீழ்ச்சிக்குள்ளாகுவதனை தவிர்க்க முடியாதென ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதி இயக்குனர் வைத்தியர் சுன்துஷ் சேதாபதி தெரிவித்துள்ளார்.

தற்போது ஏராளமான மருத்துவர்கள், வைத்திய நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களை அரசாங்கத்தின் தலையீட்டில் குறிப்பிட்ட காலத்துக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பினால் நாட்டுக்கு டொலர்கள் கிடைக்கும்.

ஆனால் அவர்கள் தற்போது தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்வதனால் நாட்டின் டொலர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles