இலங்கை தமது கடன்களை இப்போதைக்கு திருப்பி செலுத்த முடியாது என்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தாங்கள் பெற்றுள்ள பிணை முறிகளுக்கான அசல் மற்றும் வட்டி கொடுப்பனவை உடனடியாக செலுத்த உத்தரவிட கோரி, அமெரிக்க நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இலங்கையின் 250 மில்லியன் டொலர் பெறுமதியான பிணை முறிகளை கொள்வனவு செய்துள்ள ஹமில்டன் ரிசேர்வ் வங்கி இந்த வழக்கினை தொடர்ந்துள்ளது.
இலங்கையின் மொத்த பிணை முறிகளில் 5.875 சதவீதத்தை இந்த வங்கி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.