கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதியின் உருவப் பொம்மை வடிவமைக்கப்பட்டு கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளை கறுப்பு தினமாக அனுஸ்டித்து காலிமுகத்திடல் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 74 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது 73 ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார்.
அவரின் பிறந்தநாளன்று அவருக்கு இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






