எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிலையங்களில் சுகாதார பணியாளர்களால் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்யும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.