திருகோணமலை – ரொட்டவெவ – மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கைகலப்புடன் தொடர்புடைய குறித்த இரு குழுக்களுக்கிடையே தொடர்ந்தும் முறுகல் நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில் கடைக்குச் சென்ற சிறுவன் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் 3 சிறுவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.