ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 15 கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் காரணமாக முடக்கப்பட்டிருந்த கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டம் பகுதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.