சமூக ஆர்வலர் அனுருத்த பண்டார ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி முகத்திடலுக்கு அருகில் தற்போதைய நிலவரங்களை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுருத்த பண்டார ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.