எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
அத்துடன், எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து எரிபொருட்களை கொள்கலன்களில் நிரப்பும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அம்பலாங்கொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் திடீரென வாகனத்தில் ஏற்றி கொண்டு வரப்பட்ட மீன்பிடிக் கப்பலால் சிறிது நேரம் குழப்பமான நிலை ஏற்பட்டது.
கொள்கலனுக்கு எரிபொருள் வழங்கப்படாது என குறித்த எரிபொருள் நிலையத்தின் ஊழியர்கள் மீன்பிடிக் கப்பலின் உரிமையாளரிடம் கூறியதாகவும், இதனால் அவர் தனது வாகனத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.