அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் குழுக்களுக்கு, ஒரு விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள ஏலவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.