அதானி குழுமத்துக்கு இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்திவள மின்னுற்பத்தி வேலைத்திட்டங்களை வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சீ. பெர்டிணாண்டோ இந்த தகவலை வெளியிட்டதுடன், அது பொய்யானது என்றும் மன்னிப்பு கோருவதாகவும் பின்பு அறிக்கை வெளியிட்டார்.
எனினும் இந்த சர்ச்சை தொடர்பாக அதானி நிறுவனம் அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சர்ச்சையை உடனடியாக தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.