இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினண்டோ பதவி விலகியுள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.