ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை இன்று (13) முதல் அதிகரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது வரை இந்த சேவையின் கீழ் தினசரி அதிகபட்சமாக 2000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் அந்த வரம்பை 3500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி,இன்று முதல் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடமைக்கு அழைக்கப்படுவார்கள்.
03 மாத காலத்திற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஏனைய அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அனுபவமிக்க அதிகாரிகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.