மின்சார திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு 70 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 116 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த வாக்களிப்பில் 13 பேர் கலந்துக்கொள்ளவில்லை.
அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.