மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று, தற்போது ஐரோப்பாவை மையமாக கொண்டு 16 நாடுகளில் பரவி வருகிறது.
குரங்கு அம்மை குறித்து அரச உளவுத்துறை செய்த ரகசிய அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
இந்த நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பில் இந்த புலனாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனினும், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு போன்ற அண்டை நாடுகளுக்கு இந்நோய் இன்னும் பரவாததால், தற்போது இலங்கையில் இந்த தொற்று பரவும் அபாயம் இல்லை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.