தமக்கு வழங்கப்படும் சீருடைகள் தரமற்றதாக இருப்பதால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீருடையை ஒருமுறை துவைத்தவுடன் சீருடையின் நிறம் மற்றும் அளவு மாறுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், வெளிக் கடைகளில் பணம் கொடுத்து சீருடை வாங்க வேண்டியுள்ளது.
இப்பிரச்சினையால் பொலிஸ் உயரதிகாரிகளும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உயர் அதிகாரிகளின் அனுசரணையுடன் சீருடைகள் வாங்கப்பட்டாலும், தரம் சரிபார்க்கப்படாமையே இதற்கு காரணம் என பொலிஸ் உள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.