நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40 ஆவது அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.