தனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக கூறப்படும் செய்தியை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார்.
ஆளுநருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும் அரசாங்கம் இத்தகைய தகவல்களை கடுமையாக நிராகரிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு பிரதமர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.