சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்குமான உடன்படிக்கை இன்னும் 4/5 வாரங்களில் கைச்சாத்தாகும் என நம்பப்படுகிறது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் உடனான உடன்படிக்கை கைச்சாத்தாகும் பட்சத்தில், இலங்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
இதனூடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இலங்கைக்கு அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.