லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கப்பல் ஒன்று நாளை (04) இலங்கைக்கு வரவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த கப்பல் சுமார் 3,000 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் வருகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை.
டொலர் நெருக்கடி காரணமாக நாட்டில் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.