கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு ஒன்றின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான குத்தகை நிறுவனத்துடனான முரண்பாடே இதற்கு காரணம் என நம்பப்படுகிறது.
இந்த பிணக்கை தீர்ப்பது தொடர்பாக சட்டமா அதிபருடன் இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.