Saturday, September 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பிரதமரிடமிருந்து நிவாரணம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பிரதமரிடமிருந்து நிவாரணம்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (02) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு ஆதரவளிப்பதற்கும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து முச்சக்கரவண்டி தொழிற்துறையை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles