அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (03) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் சுகாதாரத் துறையில் அவசரமாக ஆராய வேண்டிய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கொவிட் நிர்வாகத்திற்காக ‘இடுகம’ நிதியத்திற்கு நன்கொடையாளர்களிடமிருந்து பாரிய தொகை கிடைத்துள்ளதாகவும், தற்போது கொவிட் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், அந்த பணத்தை சுகாதார தேவைகளுக்காக பயன்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.