இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் ஒரு சுற்று தொழில்நுட்ப கலந்துரையாடலை எதிர்ப்பார்த்துள்ளது.
இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கான கடன் பெறல் திட்டத்தை நிறைவு செய்யும் எதிர்ப்பார்ப்பில் அரசாங்கம் இருக்கிறது.
கடன் வழங்குனர் நீடிப்பு வசதி திட்டத்தின் கீழ் இலங்கை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கோருகிறது.
இந்த திட்டமானது நான்கரை ஆண்டு சலுகை காலத்தைக் கொண்ட 3 ஆண்டு திட்டமாகும்.
ஆனால் இந்த திட்டத்தை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரையில் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.